நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவென்ஞ்ச் திரைப்படத்தின் வசூல் ரூ.1,088 கோடி என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பி62 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இதன் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் நேரடியாக பான் இந்திய மொழிகளிலும் வெளியாகியது.
விருவிருப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையால் இந்தப் படம் இதுவரை ரூ.1.088 கோடி வசூலித்துள்ளது.
Advertise with us
இந்திய திரைப்படங்களில் அதிவேகமாக ரூ.1,000 கோடி வசூலித்த படமாக துரந்தர் தி ரிவென்ஞ்ச் வரலாறு படைத்துள்ளதாக படக்குழு வெளியிட்டுள்ளது.
